கடலுார் - கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் தபால் நிலையம் திறப்பு விழா நடந்தது.கடலுார் அஞ்சலகக் கோட்டத்தில் இரண்டு தலைமை தபால் நிலையங்கள், 69 துணை தபால் நிலையங்கள், 290 கிளை தபால் நிலையங்கள் இயங்கி வருகிறது.இந்நிலையில், மஞ்சக்குப்பத்தின் துணை தபால் நிலையமாக புதிய கலெக்டர் அலுவலகத்தில் அறை எண்.140ல் கலெக்டர் சந்திரசேகர சகாமுரி திறந்து வைத்தார்.விழாவில், கடலுார் கோட்ட தபால் நிலையங்களின் கண்காணிப்பாளர் முருகன், டி.ஆர்.ஓ., அருண் சத்தியா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் பரிமளம், துணை அஞ்சலக கண்காணிப்பாளர்கள் அப்துல் லத்தீப், மணிவேல், ஆய்வாளர்கள் சந்தோஷ், ஜெயக்குமார், தண்டபாணி, துணை அஞ்சல் அலுவலர் கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE