சங்கராபுரம் - சங்கராபுரம் நகரில் வேகத் தடைகளுக்கு வெள்ைள பெயிண்ட் அடிக்கும் பணி நடந்து வருகிறது.கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில் சாலைகளில் விபத்தை குறைக்க நெடுஞ்சாலைத் துறை சார்பில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. வேகத் தடைகள் இருப்பது குறித்து வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை செய்ய வேகத்தடைகளில் வெள்ளை பெயிண்ட் அடிப்பது வழக்கம்.கடந்த சில மாதங்களுக்கு முன்பு அடிக்கப்பட்ட பெயிண்ட் தற்போது அழிந்து காணப்படுகிறது. இதையொட்டி, நெடுஞ்சாலைத் துறை சார்பில் சங்கராபுரம் நகரில் நெடுஞ்சாலைகளில் உள்ள வேகத் தடைகளில் வெள்ளை பெயிண்ட் அடிக்கும் பணி நடந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE