சின்னசேலம்; சின்னசேலம் பகுதியில் பெய்து வரும் சாரல் மழையால் அறுவடை செய்யப்பட்ட மக்காச்சோளப் பயிர்களை உலர்த்த முடியாமல் விவசாயிகள் அவதிப்படுகின்றனர்.சின்னசேலம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்க ளில் நுாற்றுக்கணக்கான ஏக்கரில் சொட்டு நீர் பாசனம் மற்றும் மானாவாரியாக மக்காச்சோளம் பயிரிடப்பட்டிருந்தது. தற்போது பல இடங்களில் மக்காச்சோளம், அறுவடை செய்யப்பட்டு வருகிறது. இதனையடுத்து, கடந்த மாதங்களில் தொடர் மழை பெய்ததால், மக்காச்சோளம் அறுவடை பணிகள் பல இடங்களில் பாதித்து, விலையும் வீழ்ச்சியடைந்தது. இந்நிலையில், சில வாரங்களாக மழை குறைந்து வெயில் தொடங்கியதால், மீண்டும் அறுவடை மற்றும் உலர்த்தும் பணிகள் விறுவிறுப்பாக தொடங்கிய நிலையில், கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருவதால், விவசாயிகள் மீண்டும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE