விக்கிரவாண்டி; விக்கிரவாண்டி வெங்கடேஸ்வரா நகரில் அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா நடந்தது.விக்கிரவாண்டி பேரூராட்சி, முதல் வார்டு வெங்கடேஸ்வரா நகர் ரேஷன் கடையில் நடந்த விழாவிற்கு வங்கித் தலைவர் பூர்ணராவ் தலைமை தாங்கினார். வங்கி இயக்குனர் பலராமன் முன்னிலை வகித்தார். இயக்குனர் ரமேஷ் பயனாளிகளுக்கு அரசின் பொங்கல் பரிசு ரூபாய் 2500 மற்றும் பரிசு தொகுப்பை வழங்கினார். சமூக ஆர்வலர் ஜெனார்த்தனம், நடராஜன், ராம்குமார், சுப்ரமணி, மங்களேஸ்வரன், கைலாசம், காசிநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர் .
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE