விழுப்புரம் - பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் பூபாலன் தலைமை தாங்கினார். மாநில துணை பொதுச்செயலாளர் பிரேம்குமார் கண்டன உரையாற்றினார்.இதில், பொது மக்களின் உயிர்காக்கும் 108 ஆம்புலன்ஸ் சேவையை சீர்குலைக்க நினைக்கும் தனியார் நிறுவனத்தை கண்டித்தும், 108 ஆம்புலன்ஸ் சேவையைபாதுகாக்க வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர்.அப்போது, சென்னை மண்டல தலைவர் மகாதேவன், திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் சந்தோஷ்குமார், கடலுார் மாவட்ட செயலாளர் சுதாகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE