விழுப்புரம் - பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, செவிலியர் மேம்பாட்டு சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்நடந்தது.விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் கிரேசிபொன்மலர் தலைமைதாங்கினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஜெய்சங்கர், செயலாளர் ஜெயக்குமார், இணை செயலாளர் அசோகன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.இதில், அரசு மருத்துவமனைகளில் 6 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.அப்போது, நிர்வாகிகள் அறிவுக்கரசி, ெஹலன்பிரீத்தா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE