திருவெண்ணெய்நல்லுார் - டிராக்டரை முந்திச் செல்ல முயன்ற கூலி தொழிலாளி, டிரெய்லரில் சிக்கி இறந்தார்.திருவெண்ணெய்நல்லுார் அடுத்த டி.குன்னத்துார் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டுரங்கன் மகன் பிரகாஷ்,38; கூலிதொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு 8.00 மணியளவில் கொடியூரில் இருந்து வீட்டிற்கு பைக்கில் சென்றுக் கொண்டிருந்தார்.அப்போது முன்னாள் சென்ற கரும்பு டிராக்டரை முந்திச் செல்ல முயன்றபோது, நிலை தடுமாறி கீழே விழுந்தார். அவர் மீது, டிராக்டரின் டிரெய்லர் ஏறி இறங்கியது. அதில் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.திருக்கோவிலுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE