வானுார் - வானுார் அருகே ஓய்வு பெற்ற அரசு டாக்டரின் காரை திருடிய ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.வானுார் அடுத்த தி.கூட்ரோடு சப்தகிரி டெம்பில் சிட்டி பகுதியில் வசித்து வருபவர் மோகன்தாஸ், 62; ஓய்வு பெற்ற அரசு டாக்டர். இவர் கடந்த 3ம் தேதி தனக்கு சொந்தமான மாருதி ஸ்விப்ட் காரை, வீட்டு வாசலில் நிறுத்தி விட்டு, வீட்டிற்கு சென்றுள்ளார்.பின் மறுநாள் 4ம் தேதி காலையில் வெளியில் வந்து பார்த்தபோது, வாசலில் இருந்த காரை காணவில்லை.அக்கம் பக்கத்தில் விசாரித்தபோது, நள்ளிரவு 12:30 மணிக்கு, மர்ம நபர் ஒருவர் காரை ஓட்டிச் சென்றது தெரிய வந்தது.இதுகுறித்து மோகன்தாஸ் அளித்த புகாரின் பேரில், ஆரோவில் போலீசார் வழக்குப் பதிந்து காரை திருடிய ஆசாமியை தேடிவருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE