விழுப்புரம்; மருமகளை தாக்கிய, மாமனார், மாமியார் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.விழுப்புரம் அடுத்த வி.அகரத்தை சேர்ந்தவர் முருகையன் மனைவி கலைவாணி,35; திருமணமாகி 15 ஆண்டாகும் இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.இந்நிலையில், கலைவாணியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கடந்த 3ம் தேதி அவரது மாமனார் இருசப்பன், மாமியார் நாகம்மாள் ஆகியோர் திட்டி தாக்கினர்.இது குறித்த புகாரின்பேரில், இருசப்பன், நாகம்மாள் மீது வளவனுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE