திருவாலங்காடு: திருவாலங்காடு ஒன்றியம், ஆற்காடுகுப்பம், குப்பம்கண்டிகை, வீரராகவபுரம் மற்றும் திருவாலங்காடு ஆகிய ஊராட்சிகளில், அரசு அறிவித்த பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி, ரேஷன் கடைகளில் நடந்தது.இதில், திருவாலங்காடு ஒன்றிய சேர்மன் ஜீவா பங்கேற்று, 1,500 ரேஷன் கார்டுதாரர்களுக்கு, 2,500 ரூபாய் ரொக்கம், முழு கரும்பு, சர்க்கரை மற்றும் பொங்கல் வைக்க தேவையான பொருட்கள் கொண்ட தொகுப்பு பை வழங்கினார்.நிகழ்ச்சியில் வட்ட வழங்கல் அலுவலர் வெங்கடேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.ரயில்கள் இயக்கம்; பயணியர் மகிழ்ச்சிதிருத்தணி: திருத்தணி ரயில் நிலையத்தில் இருந்து, சென்னை சென்ட்ரல் மற்றும் கடற்கரை வரைக்கும் இயக்கப்படும் மின்சார ரயில்கள், கொரோனா தொற்று காரணமாக, மார்ச் மாதம், 23ம் தேதி முதல், கடந்தாண்டு நவம்பர் மாதம் வரை நிறுத்தப்பட்டிருந்தது.இந்நிலையில், கடந்த மாதம், ஒரு சில மின்சார ரயில்கள் மட்டும், அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் நலன் கருதி இயக்கப்பட்டு வந்தது.இந்நிலையில், நேற்று முன்தினம் முதல் வழக்கம் போல், திருத்தணி - சென்னை சென்ட்ரல் மற்றும் கடற்கரை வரை செல்லும் அனைத்து மின்சார ரயில்கள் இயங்கும் என, ரயில்வே நிர்வாகம் அறிவித்ததால், பயணியர் மகிழ்ச்சி அடைந்தனர்.அதாவது, அதிகாலை, 4:55 மணி முதல் இரவு, 9:30 மணி வரை வழக்கமாக இயங்கி வரும் அனைத்து மின்சார ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE