ஸ்ரீபெரும்புதுார் - ஊராட்சிகளில் அட்டகாசம் செய்யும் பன்றிகளை பிடித்து அகற்ற, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்தில், மாம்பாக்கம், திருமங்கலம், மொளச்சூர் உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில், பன்றிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பன்றிகள் வளர்ப்போர், ஊராட்களில் அவற்றை விட்டு வளர்ந்ததும் பிடித்து செல்கின்றனர்.ஒரு பன்றியை குடியிருப்பில் விட்டு, இறைச்சிக்காக பிடித்து செல்வதற்குள், அது, 50 குட்டிகளுக்கு மேல் இனப்பெருக்கம் செய்கின்றன.இதனால், பன்றிகளின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து, அவை, குடியிருப்பு, விவசாய நிலங்கள், வீட்டு தோட்டங்களை நாசம் செய்கிறது. தவிர, சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, பொதுமக்களுக்கு நோய் பரவுகிறது.எனவே, குடியிருப்பு பகுதியில் பன்றிகளை விடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். சுற்றித்திரியும் பன்றிகளை பிடித்து அகற்ற வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE