காஞ்சிபுரம் - கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன், 41. இவருக்கு புற்று நோய் இருப்பதால், குடும்பத்துடன், காஞ்சிபுரம் காரப்பேட்டையில் உள்ள, அரசு புற்று நோய் மருத்துவ மனைக்கு, நேற்று முன்தினம் மதியம் சென்றார்.மருத்துவமனை நுழை வாயிலில் இருந்த காவலாளி, காலை, 8.00 மணி முதல் 12.00 மணி வரை மட்டுமே நோயாளிகள் அனுமதிக்கப்படுவர் எனக்கூறி, அவர்களை திருப்பி அனுப்பியதால், அவரும், அவரது குடும்பத்தினரும் மிகவும் சிரமப்பட்டனர்.இது குறித்து, மருத்துவமனை கண்காணிப்பாளர் மனோகரன் கூறியதாவதுகாவலாளி செய்தது, எங்களுக்கு தாமதமாக தான் தெரிந்தது. அவரை அழைத்து கண்டித்துள்ளோம். திருப்பி அனுப்பப்பட்ட சந்திரன், உள்நோயாளிகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE