மதுராந்தகம் - பொங்கல் பண்டிகையை ஒட்டி, தமிழக ரேஷன் கடைகளில், ஒவ்வொரு அட்டைதாரருக்கும், 2,500 ரூபாய் மற்றும் பச்சரிசி, சர்க்கரை, முந்திரி, முழு செங்கரும்பு உள்ளிட்டவை அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது.அதன்படி, மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம், உத்திரமேரூர் உள்ளிட்ட பல பகுதிகளில், நியாயவிலை கடைகளில், பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் 2,500 ரூபாய், நேற்று முன்தினம் வழங்கப்பட்டது.ரேஷன் கடை ஊழியர்கள், எந்த நாள் வர வேண்டும் என்பதை தெளிவாக குறிப்பிட்டு, 'டோக்கன்' வழங்காததால், நுாற்றுக்கணக்கான நுகர்வோர், ஒரே நேரத்தில் குவிந்தனர்.அறிவிப்பு இல்லாமலேயே, பல்வேறு பகுதிகளில் நேற்று, கொட்டும் மழையிலும், ரேஷன் கடைகள் முன், குடும்ப அட்டைதாரர்கள் பரிசு தொகுப்பு பெற குவிந்தனர். இதனால், குடும்ப அட்டைதாரர்கள் பல்வேறு சிரமத்திற்கு உள்ளாகினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE