சென்னை - சென்னையில், இரண்டு நாட்களாக கனமழை பெய்கிறது. அதன்படி, 5ம் தேதி காலை, 6:00 மணி முதல், 6ம் தேதி காலை, 6:00 மணி வரை, ௧௨.௩ செ.மீ., மழை பெய்துள்ளது. இதனால், கிண்டி, மாம்பலம், மயிலாப்பூர், பெரம்பூர், புரசைவாக்கம் உள்ளிட்ட, 36 இடங்களில் மழைநீர் தேங்கியது. தேங்கிய மழைநீரை, மாநகராட்சி பணியாளர்கள் உடனடியாக அகற்றினர். அதேபோல், ஐந்து இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. அந்த மரங்களும் உடனடியாக அகற்றப்பட்டன. பொதுமக்கள் மழைநீர் தேக்கம் மற்றும் ஏதேனும் புகார்களுக்கு, 1913 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என, மாநகராட்சி அறிவித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE