சென்னை; சென்னை மாநகராட்சியில், கொரோனா தொற்றால் உயிரிழந்த எட்டு பேரின் குடும்பத்திற்கு, 25 லட்சம் ரூபாய் நிவாரணம், பாதிக்கப்பட்ட, 51 பேருக்கு, ௨ லட்சம் ரூபாய் நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில், கொரோனா தடுப்பு பணியின் போது, தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தால், 25 லட்சம் ரூபாய் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும்; பாதிக்கப்படும் நபருக்கு, ௨ லட்சம் ரூபாய் வழங்கப்படும் என, தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, சென்னை மாநகராட்சியில், கொரோனா பணியின்போது, 12 பேர் இறந்தனர். அதேபோல், 118 பேர் பாதிக்கப்பட்டனர். இவர்களின் விபரங்களை, தமிழக அரசுக்கு மாநகராட்சி அனுப்பியது.அதில், உயிரிழந்த, 12 பேரில், நிரந்த பணியாளர்கள் எட்டு பேருக்கு, 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், பாதிக்கப்பட்ட, 118 பேரில், 51 நிரந்த பணியாளர்களுக்கு, ௨ லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள நபர்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE