ஓமலூர்: ஓமலூர், ஆர்.சி., செட்டிப்பட்டியை சேர்ந்தவர் சேகர், 55; கூலித்தொழிலாளி. இவர், நேற்று காலை, 9:00 மணிக்கு, மேச்சேரி பிரிவு அருகே சென்றபோது, ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி, பணம் பறிக்க முயன்றார். இதுகுறித்து, சேகர் அளித்த புகார்படி, கருமலைக்கூடல், செல்லப்பன் தெருவைச் சேர்ந்த வெள்ளையன், 23, என்பவரை, ஓமலூர் போலீசார் கைது செய்தனர். அவர் மீது தாரமங்கலம், நங்கவள்ளி போலீஸ் ஸ்டேஷன்களில், பல்வேறு வழக்குகள் உள்ளன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE