தர்மபுரி: மத்திய, மாநில அரசுகளை கண்டித்து, தர்மபுரி மாவட்ட, சி.ஐ.டி.யு., சார்பில், தலைமை தபால் நிலையம் முன், மறியல் போராட்டம் நடந்தது. தர்மபுரியில் நடந்த போராட்டத்துக்கு, சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் ஜீவா தலைமை வகித்தார். மாநில செயலாளர் நாகராசன் முன்னிலை வகித்து பேசியதாவது: மத்திய அரசின், தொழிலாளர் சட்ட தொகுப்புகளை நீக்க வேண்டும். மத்திய அரசின் மூன்று சட்டங்களை திரும்ப பெற வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை, தனியாருக்கு விற்பனை செய்யும் முடிவை தவிர்க்க வேண்டும். மேலும், வறுமை கோட்டுக்கு கீழுள்ள அனைத்து குடும்பங்களுக்கும், மாதம், 7,500 ரூபாய் கொரோனா நிவாரணம் வழங்க வேண்டும். பாரபட்சம் இல்லாமல், அனைத்து நலவாரிய உறுப்பினர்களுக்கும், பொங்கல் பரிசுத்தொகை வழங்க, மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். மாநில குழு உறுப்பினர்கள் நாகராஜன், கலாவதி, மாவட்ட நிர்வாகிகள் அங்கம்மாள், சண்முகம், முரளி உள்பட, பலர் கலந்து கொண்டனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட, 150க்கும் மேற்பட்டோரை பேலீசார் கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE