கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினி மற்றும் போலீசார், நேற்று முன்தினம் மாலை, வசந்தப்பள்ளி ஏரி அருகில் ரோந்து சென்றனர். அப்போது, ஏரியில் ஒரு டிப்பர் லாரியும், அதில் மணல் ஏற்ற ஒரு ஜே.சி.பி., இயந்திரமும் இருந்துள்ளது. அங்கு சென்றபோது, அங்கிருந்த அனைவரும் தப்பியோடினர். இதையடுத்து, நான்கு யூனிட் மணலுடன் இருந்த டிப்பர் லாரி மற்றும் ஜே.சி.பி., இயந்திரத்தை பறிமுதல் செய்த போலீசார், அந்த வாகனங்களின் டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்களை தேடி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE