குளித்தலை: தோகைமலையில், வர்த்தக மேம்பாடு மற்றும் ஒருங்கிணைந்த சந்தைப்படுத்துதல் பற்றிய இணையவழி கருத்தரங்கு நடந்தது. குளித்தலை அடுத்த, தோகைமலையில், நபார்டு சாலிடாரிட்டி உழவர் உற்பத்தியாளர் நிறுவன அலுவலகத்தில், தமிழக அரசு சார்பில், வர்த்தக மேம்பாடு மற்றும் ஒருங்கிணைந்த சந்தைப்படுத்துதல் பற்றிய, மாநில இணைய வழி ஒரு நாள் கருத்தரங்கு நடந்தது. சாலிடாரிட்டி நிறுவன சேர்மன் சத்யா தலைமை வகித்தார். வேளாண் துறை அமைச்சர் அன்பழகன், தலைமை செயலாளர் சண்முகம், முதன்மை செயலர் ககன் தீப் சிங் பேடி, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை இயக்குனர் முரளிதரன் உள்பட, வேளாண் துறை அதிகாரிகள், முன்னோடி உழவர் உற்பத்தியாளர் நிறுவன நிர்வாகிகள் ஆகியோர், வர்த்தக மேம்பாடு மற்றும் ஒருங்கிணைந்த சந்தைப்படுத்துதல், விவசாயிகளுக்கான கடன் மற்றும் மானிய திட்டங்கள், சிறப்பு திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தனர். ஏற்பாடுகளை, நபார்டு வங்கி உதவி பொது மேலாளர் பரமேஷ்குமார் செய்திருந்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE