கரூர்: கரூரில் விவசாயிகளுக்கு ஆதரவாக, சி.ஐ.டி.யு., அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மத்திய, பா.ஜ., அரசு கொண்டு வந்துள்ள, புதிய மூன்று வேளாண்மை சட்டங்களை எதிர்த்தும், அதை திரும்பப் பெறக்கோரியும் டில்லியில், விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக, நாடு முழுவதும் நேற்று, சி.ஐ.டி.யு., அமைப்பினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். கரூரில், தபால்-தந்தி அலுவலகம் முன், தலைவர் ஜீவானந்தம் தலைமையில், சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதையடுத்து, மாவட்ட செயலாளர் முருகேசன், துணைத்தலைவர் சாம்பசிவன், உதவி செயலாளர் பாலசுப்ரமணியன் உள்பட, 19 பேரை, டவுன் போலீசார் கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE