கரூர்: கரூர் அருகே மாயமான சிறுவனின் உடல் கிணற்றில் மீட்கப்பட்டது. கரூர் மாவட்டம், பசுபதிபாளையம் வடக்கு தெருவை சேர்ந்தவர் பாலசுப்ரமணி, 48; மனைவி முத்துலட்சுமி, 45; இவர்களுக்கு குழந்தை இல்லாததால், ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, ஆண் குழந்தையை தத்து எடுத்து, நாட்ராயன், 7, என பெயரிட்டு வளர்த்து வந்தனர். கடந்த, 4 முதல் மகனை காணவில்லை என, பாலசுப்ரமணி போலீசில் புகார் செய்திருந்தார். இந்நிலையில், நேற்று காலை வீட்டுக்கு அருகே உள்ள கிணற்றில் சிறுவன் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடலை மீட்டு, பசுபதிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE