கரூர்: கரூர் நகரில் ஜவஹர் பஜாரில், போக்குவரத்து நெரிசலை சரி செய்ய சிக்னல் கம்பங்கள் அமைக்கப்பட்டு, விளக்குகள் போடப்பட்டன. தற்போது, பல இடங்களில் விளக்குகள் உடைந்து விட்டன; சில இடங்களில் எரியவில்லை. இதனால், வர்த்தக நிறுவனங்கள் உள்ள, ஜவஹர் பஜாரில் அடிக்கடி வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொள்கின்றன. வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். விபத்து அச்சமும் ஏற்பட்டுள்ளது. எனவே, சேதமடைந்துள்ள சிக்னல் விளக்குகளை மாற்ற, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE