கரூர்: கரூர், அண்ணா வளைவு பகுதியில், பொதுமக்கள் பயன்பாட்டுக்காக போர்வெல் அமைக்கப்பட்டு, சின்டெக்ஸ் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. தற்போது, தொட்டி சேதமடைந்துள்ளது. இதனால், பொது மக்கள் தண்ணீர் பிடிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து, பலமுறை புகார் அளித்தும் பலனில்லை. போர்வெல் குழாயை சீரமைத்து, புதிய சின்டெக்ஸ் தொட்டியை வைக்க வேண்டும். இதேபோல், சுற்றுவட்டாரத்தில் சேதமடைந்துள்ள சின்டெக்ஸ் தொட்டிகளையும் சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE