பள்ளிபாளையம்: இந்தாண்டு நெல் சாகுபடிக்கு, விலை கூடுதலாக கிடைக்குமா என, விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இந்தாண்டு தென்மேற்கு பருவமழை அதிகளவு பெய்துள்ளதால், காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்து, மேட்டூர் அணை நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து அணை நிரம்பியது. தொடர்ந்து, நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. மேட்டூர் கிழக்குகரை வாய்க்காலில் கடந்த ஆகஸ்டில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதனை பயன்படுத்தி, சேலம், நாமக்கல் மாவட்ட விவசாயிகள் நெல்சாகுபடியில் ஈடுபட்டனர். இந்தாண்டு நெல் சாகுபடி அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையை தொடர்ந்து, வடகிழக்கு பருவமழையும் அதிகளவு பெய்தது. தேவையான தண்ணீர் உள்ளதால் சாகுபடி நல்ல முறையில் வளர்ச்சி பெற்று வருகிறது. இன்னும் சில நாட்களில் அறுவடை பணியை விவசாயிகள் துவக்கி விடுவர். கடந்தாண்டை விட நெல்லுக்கு கூடுதல் விலை கிடைக்குமா என, விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE