நாமக்கல்: 'எம்.ஆர்.பி., செவிலியர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்' என, நாமக்கல்லில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு எம்.ஆர்.பி., செவிலியர் மேம்பாட்டு சங்கம் சார்பில், நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார். மாநில பொதுக்குழு கூட்டத்தின் முடிவின்படி எம்.ஆர்.பி., செவிலியர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். மாவட்ட செயலாளர் நாகராஜ், மாவட்ட பொருளாளர் தேன்மொழி உள்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE