பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் ஒன்றியத்தில், 15 பஞ்சாயத்துகள் உள்ளன. இதில் பாப்பம்பாளையத்தை தேர்வு செய்து, தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் மூலம், கிராமத்தில் தொழில் வளர்ச்சி திட்டத்தை மேம்பாடு செய்வது குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. பஞ்., தலைவர் ஜெயவேல் தலைமை வகித்தார்.
இதுகுறித்து, அவர் கூறியதாவது: பஞ்சாயத்தில் புதிய தொழில் துவக்குவது, செய்யும் தொழிலை மேம்பாடு செய்வது, இளைஞர்களுக்கு குடிசை தொழில் அமைத்து கொடுப்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. இப்பகுதி விவசாயம் நிறைந்தவை என்பதால் வெல்லம், நாட்டு சர்க்கரை தயாரிக்கவும், தேங்காய் தொட்டி பயன்படுத்தி எரிபொருட்கள் தயாரிக்கவும் அரசு கடனுதவி வழங்க வேண்டும். பீடி தொழிலாளர்கள், தற்போது வேலையின்றி உள்ளனர். அவர்களுக்கு மாற்று தொழில், குடிசை தொழில் செய்ய அரசு உதவி செய்ய வேண்டும் என, கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு, அறிக்கையாக தயாரிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கொடுத்துள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார். ஊரக புத்தாக்க திட்ட செயல் மாவட்ட அலுவலர் ராஜேந்திரன், வட்டார அலுவலர் ரவிக்குமார் மற்றும் விவசாயிகள், இளைஞர்கள், தொழில் முனைவோர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE