பள்ளிபாளையம்: ஆவாரங்காடு அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள வளாகத்தில், மூலிகை செடிகள் வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிபாளையம் அடுத்த, ஆவாரங்காடு பகுதியில் அரசு மருத்துவமனை செயல்படுகிறது. தினமும் ஏராளமான பொதுமக்கள் சிகிச்சைக்கு வருகின்றனர். இந்த வளாகத்தின் ஒரு பகுதி காலியிடமாக உள்ளது. இதில், தற்போது முட்புதர் வளர்ந்து சுகாதார சீர்கேடாக காணப்படுகிறது. விஷப் பூச்சிகளும் உலா வருகின்றன. மழை காலம் என்பதால் காலியிடத்தை சுத்தம் செய்து, மரக்கன்றுகள், மூலிகை செடிகள் வைத்தால், விரைவாக வளர்ச்சி பெறும். தற்போது, இதற்கு சரியான காலகட்டம் என்பதால், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE