நாமக்கல்: நாமக்கல், சேந்தமங்கலம் சாலையில், நேற்று முன்தினம், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த காரில், கட்டுக்கட்டாக பணம் இருந்தது. விசாரணையில், சேந்தமங்கலத்தை சேர்ந்த டிரைவர் பாஸ்கரன், 26, மணிமாறன், 45 என்பது தெரிய வந்தது. விசாரணையில், நாமக்கல், வண்டிக்கார தெருவை சேர்ந்தவர் வெங்கடேஷ், 43, டாஸ்மாக் பார் நடத்தி வருகிறார். அவரது பாருக்கு, மது குடிக்க வந்த பாஸ்கரன், மணிமாறன் ஆகியோர், தங்களுக்கு தெரிந்த நபர்கள், கணக்கில் வராத கறுப்பு பணம் நிறைய வைத்திருப்பதாகவும், அதை வெள்ளை பணமாக மாற்ற இரட்டிப்பு செய்து தருவதாகவும் கூறி உள்ளனர். அதை நம்பி, தன்னிடம் இருந்த, 5,000 ரூபாயை, காரில் வந்தவர்களிடம் கொடுத்துள்ளார். அதற்கு பதில், காரில் இருந்த நபர்கள், 100 ரூபாய் கட்டு கொடுத்துள்ளனர். அப்போது, போலீஸ் வருவதாக கூறி, அங்கிருந்து அனைவரும் தப்பிச் சென்றது தெரியவந்தது. இதற்கிடையில், வெங்கடேஷ் தன்னிடம் கொடுத்த, 100 ரூபாய் கட்டை பிரித்து பார்த்துபோது, அதில் மேல் பகுதியில் மூன்று, 100 ரூபாய் நோட்டுகளும், அடிப்பகுதியில், இரண்டு 100 ரூபாய் நோட்டுகளும் இருந்தன. மீதமுள்ள அனைத்தும் வெள்ளை தாள்களாக இருந்தை கண்டு அதிர்ச்சியடைந்ததும் தெரிந்தது. புகாரின் பேரில், நாமக்கல் போலீசார் வழக்கு பதிந்து, பாஸ்கரன், மணிமாறன் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள கண்ணன், விக்ரம், முருகன் ஆகியோரை தேடி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE