ப.வேலூர்: பரமத்தி அருகே, உடலில் தீப்பற்றி சிகிச்சை பெற்று வந்த சிறுமி, உயிரிழந்தார். பரமத்தி அடுத்த, கோனூர் கந்தம்பாளையம் அருகே, தாத்திப்பாளையத்தை சேர்ந்தவர் பூபதி; லாரி டிரைவர். மனைவி கீதா. டிச.,10 ல் பூபதி பணிக்கு சென்று விட்டார். கீதா தன் குழந்தைகள் கவுசிக், 7, வித்யபாரதி,5, ஆகியோரை வீட்டில் விட்டு கூலி வேலைக்கு சென்றார். இந்நிலையில் குழந்தைகள் இருவரும் வீட்டிற்கு அருகே இருந்த குப்பையில் தீ வைத்து விளையாடினர். அப்போது எதிர்பாராத விதமாக குப்பையிலிருந்த தீ, சிறுமி வித்யபாரதியின் உடையில் பற்றி எரிய ஆரம்பித்தது. அவரது அலறல் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்து உடனடியாக நாமக்கல் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில்? சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று மதியம் உயிரிழந்தார். பரமத்தி போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE