வேலூர்: வேலூரிலுள்ள, உள்ளாட்சி நிதி தணிக்கை துறை அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்து, கணக்கில் வராத, 1.04 லட்சம் ரூபாயை கைப்பற்றினர். வேலூரில், தமிழ்நாடு உள்ளாட்சி நிதி தணிக்கை துறை உதவி இயக்குனர் அலுவலகம் உள்ளது. இங்கு, ஆங்கிலப்புத்தாண்டையொட்டி லஞ்சம், பரிசு பொருட்கள் வாங்குவதாக, லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார், நேற்று மாலை, 6:00 மணிக்கு, அந்த அலுவலகத்தில் அதிரடி சோதனை செய்தனர். அதில், உதவி இயக்குனர் பரமானந்தம் என்பவரிடம் இருந்து கணக்கில் வராத, 1.04 லட்சம் ரூபாய் மற்றும் ஏராளமான பரிசு பொருட்களை கைப்பற்றினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE