தாவணகரே:"எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, எப்போதும் தன்னைப் பற்றி அனைவரும் பேச வேண்டும் என்பதற்காக, ஏதேதோ பேசுகிறார்," என, மாநில, பா.ஜ., தலைவர் நளின்குமார் கட்டீல் தெரிவித்தார்.
தாவணகரேவில், அவர் நேற்று கூறியதாவது:சித்தராமையா எதையும் பேசாமல் இருந்தால், காங்கிரசில் காணாமல் போய்விடுவார். இவருக்கு, ஆர்.எஸ்.எஸ்., மீதோ, பசுவதை தடை சட்டத்தின் மீதோ கோபமில்லை. காங்கிரசில், தன்னை நிலை நிறுத்திக்கொள்ள, சிவகுமார் மீது காண்பிக்க வேண்டிய கோபத்தை, பா.ஜ., மீது காண்பித்து, ஏதேதோ பேசுகிறார்.காங்கிரசில், சிவகுமாரின் செல்வாக்கு அதிகரித்து, அனைத்து இடங்களிலும், அவரே தென்படுவதால், சித்தராமையா இப்படி செய்கிறார். இவ்விரு தலைவர்களுக்கு இடையே, போட்டி அதிகரித்துள்ளது. காங்கிரசில், உட்பூசல் அதிகரித்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE