பெங்களூரு:கிராமப்பகுதிகளின் பிரச்னைகளை தீர்த்து வைக்கவும், எஸ்.சி., மக்களுக்கு, அரசின் திட்டங்களை சேர்க்கவும், சமூக நலத்துறை சார்பில், 'துறையின் நடை, கிராமத்தை நோக்கி' என்ற திட்டம் துவக்கப்படுகிறது, " என, சமூக நலத்துறை அமைச்சர் ஸ்ரீராமுலு தெரிவித்தார்.
பெங்களூரில், அவர் நேற்று கூறியதாவது:அரசின் திட்டங்களை, கிராமப்பகுதி மக்களுக்கு, கொண்டு சேர்க்கும் நோக்கில், இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கிராமப்பகுதிகளின் பிரச்னைகளை, நேரில் தெரிந்து கொண்டு, தீர்வு காண இத்திட்டம் உதவியாக இருக்கும்.அரசின் திட்டங்கள், நகர்ப்பகுதிகளுக்கு மட்டுமின்றி, கிராமப்புற மக்களுக்கும் கிடைக்கும். இனி நான் கிராமங்களில் இருந்துதான், துறையின் பணிகளை கவனிப்பேன்.சமூக நலத்துறை, எஸ்.டி., இயக்குனரக தலைவர், கிராமங்களில் பணியாற்ற வேண்டும். படிப்படியாக அனைத்து துறைகளின் முக்கியஸ்தர்கள், கிராமங்களில் பணியாற்றும்படி உத்தரவிடப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE