கோவை: திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் சமீபத்தில் நடந்த மக்கள் கிராம சபை கூட்டத்தில் அதிமுக.,வை சேர்ந்த பூங்கொடி என்ற பெண் கேள்வியெழுப்பியதை அடுத்து திமுக.,வினரால் தாக்கப்பட்டார். இதில் காயமடைந்த அவர், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், பெண் தாக்கப்பட்டது குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 15 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என தேசிய எஸ்சி, எஸ்டி ஆணையம், தமிழக டிஜிபி மற்றும் மாவட்ட எஸ்பி அருளரசு ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE