திருவாடானை : தினமலர் செய்தி எதிரொலியாக திருவாடானை தாலுகாவில் மூன்று ஊராட்சிகளில் மினிகிளினிக்குகள் திறக்க சுகாதாரத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள தாலுகாக்களில் திருவாடானை தாலுகாவும் ஒன்று. எஸ்.பி.பட்டினம், தொண்டி, நம்புதாளை, பாண்டுகுடி உள்ளிட்ட ஊர்களில் 10க்கும் மேற்பட்டோர் பலியாயினர். தொண்டியில் கொரோனா சிகிச்சை மையம் திறக்கபடும் என்று அறிவிக்கபட்டு அத்திட்டம் பின்பு கைவிடபட்டது.இந்நிலையில் அரசு மினி கிளினிக் திட்டத்தை இப்பகுதியில் செயல்படுத்தவில்லை எனதினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இது குறித்து சுகாதாரத்துறையினர் கூறுகையில்-நெய்வயல், ஆண்டாவூரணி,முள்ளிமுனை ஆகிய ஊராட்சிகளில் மினி கிளினிக் திறக்க முடிவு செய்யபட்டுள்ளது, என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE