விருகம்பாக்கம்:சாலிகிராமத்தில் உள்ள, தன் வீட்டில் குடியிருப்போரை வெளியேற்றி தரும்படி, நடிகர் விஜய் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய்க்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு, சென்னை, சாலிகிராமம், காவேரி தெருவில் உள்ளது. இங்கு, ரவிராஜா, 47, மற்றும் குமார், 45, ஆகியோர், சில ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.இவர்களில், ரவிராஜா 'விஜய் மக்கள் இயக்கம்' அமைப்பின், அகில இந்திய செயலராக இருந்தார். குமார், 45, துணை செயலராக இருந்தார்.
சமீபத்தில் இவர்கள், விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்து நீக்கப்பட்டனர்.தற்போது, பொறுப்பில் இருந்து, இரண்டு பேரும் நீக்கப்பட்டதால், வீட்டை காலி செய்யும்படி, நடிகர் விஜய் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது. ஆனால், இரண்டு பேரும் வீட்டை காலி செய்யவில்லை. இதையடுத்து, இரண்டு பேரையும், வீட்டில் இருந்து காலி செய்து தரும்படி, விருகம்பாக்கம் காவல் நிலையத்தில், நடிகர் விஜய் தரப்பில், புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், வீட்டை காலி செய்வதாகவும், அதற்கு முன், நடிகர் விஜயை சந்திக்க வேண்டும் எனவும், ரவிராஜா நடிகர் விஜய்க்கு கடிதம் அனுப்பியுள்ளார்.மேலும், வீட்டை காலி செய்ய அவகாசம் வேண்டும் என, தெரிவித்ததாக கூறப்படுகிறது.இதுகுறித்து, விருகம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE