கோவை:கோவையில், தி.மு.க., கூட்டத்தில் பெண் தாக்கப்பட்டது குறித்து, 15 நாட்களுக்குள் அறிக்கை அளிக்க டி.ஜி.பி., மற்றும் எஸ்.பி.,க்கு, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த, 2ம் தேதி, கோவை மாவட்டம், தொண்டாமுத்துார் தேவராயபுரத்தில், தி.மு.க., சார்பில், கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்தில், அ.தி.மு.க.,வைச் சேர்ந்த பூங்கொடி என்பவர், ஸ்டாலினிடம் கேள்வி கேட்க முயன்றார். இதையடுத்து, அவரை கூட்டத்தில் இருந்து வெளியேற்ற முயன்றனர்.அப்போது அவரை, தி.மு.க.,வினர் தாக்கியதாக புகார் தெரிவிக்கப்பட்டது. மேலும், பெண்ணுக்கு உதவியாக வந்த சிலரையும் தாக்கியதாக கூறப்பட்டது.
இந்த தாக்குதல் குறித்து விசாரணை நடத்தி, வழக்கு பதிய வேண்டும் என, தேசிய தாழ்த்தப் பட்டோர் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டது. விசாரித்த ஆணையம், இவ்விவகாரம் குறித்து, 15 நாட்களுக்குள் டி.ஜி.பி., மற்றும் கோவை ரூரல் எஸ்.பி., ஆகியோர் அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளது.தாக்குதல் தொடர்பாக போலீசார் எடுத்த நடவடிக்கை, தாழ்த்தப்பட்ட பெண்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கை குறித்தும் விசாரணை அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE