கோவை:தென்னிந்திய சிறு நுாற்பாலைகள் சங்க(சிஸ்பா), 29வது ஆண்டு பொதுக்குழு கூட்டம், கேரளா கிளப்பில் நடந்தது.சங்கத்தலைவர் முருகேசன் தலைமையில், செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்ற கூட்டத்தில், பஞ்சில் துவங்கி ஆயத்த ஆடைகள் வரை உள்ள அனைத்து ஜவுளித்தொழில்களுக்கும் ஒரே மாதிரியாக, 5 சதவீதம் ஜி.எஸ்.டி., விதித்திருப்பது போல், செயற்கை இழைகளுக்கும், 5 சதவீதமாக குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறு, குறு நடுத்தர நுற்பாலைகளுக்கு அனைத்து விதமான கடன்களுக்கும், 7 சதவீத வட்டியில் கடன் வழங்க வேண்டும். நடப்பு மூலதனத்தின் விற்று முதல் வரையறை, 20 சதவீதமாக உள்ளதை, 40 சதவீதமாக உயர்த்திதர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள், தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE