தொண்டாமுத்துார்,:தொண்டாமுத்துார் வட்டாரத்தில், இரவில் பெய்த கனமழையால், சித்திரைச்சாவடிதடுப்பணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், நேற்று முன்தினம் இரவு முழுவதும் தொடர்ந்து கனமழை பெய்ததால், நொய்யல் ஆற்றின் முதல் தடுப்பணை அணையான, சித்திரைச்சாவடி தடுப்பணைக்கு, அதிகாலை, 5:15 மணிக்கு நீர்வரத்து துவங்கியது. நீர்வரத்து அதிகரித்து, வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சித்திரைச்சாவடி தடுப்பணை புனரமைக்கப்பட்ட பின், முதல்முறையாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வாய்க்கால்கள் மூலம், குளங்களுக்கு நீர் அனுப்பப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE