கோவை:கோவை பாலசுந்தரம் ரோட்டில் பட்டு வளர்ச்சித்துறையின் பட்டுக்கூடு விற்பனை அங்காடி உள்ளது. ஊரடங்கு காரணமாக, பட்டுக்கூடு விலை வீழ்ச்சி அடைந்து, கிலோவுக்கு, 200 முதல் 250 ரூபாய் வரை மட்டுமே விலை கிடைத்தது. இதனால் பட்டு விவசாயிகள் பாதிப்புக்கு உள்ளாகினர்.ஊரடங்கு தளர்வுக்கு பிறகு, இப்போது தறிகள் முழுமையாக இயங்குவதால், பட்டு நுால் தேவை அதிகரித்து, கூடு விலையும் அதிகரித்துள்ளது. அதனால் கடந்த ஒரு வாரமாக நடந்த ஏலத்தில் முதல் தரமான பட்டுக்கூடு விலை கிலோ, 430 ரூபாய்க்கும், அதற்கு அடுத்த தரமுள்ள கூடு கிலோ, 380 ரூபாய்க்கு விற்பனையாகி உள்ளதாக, பட்டுக்கூடு விற்பனை அங்காடி ஆய்வாளர் ரிஷ்வானா தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE