திண்டுக்கல் : திண்டுக்கல் மாநகராட்சி கமிஷனர் பாலசுப்பிரமணியனிடம் பா.ம.க., வினர் 20 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு மனு அளித்தனர்.
மாநில துணைப் பொதுச் செயலாளர் கோபால் தலைமையில் அளித்த மனு: நாற்பது ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் கல்வி, வேலை வாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீதம் தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். இதற்கான அரசாணையை உடனே பிறப்பிக்க வேண்டும், என்றனர். மாவட்ட செயலாளர்கள் ஜான் கென்னடி, ரவிச்சந்திரன், தலைவர் செல்வம், அமைப்பு செயலாளர் திருப்பதி பங்கேற்றனர். முன்னதாக, கோரிக்கையை வலியுறுத்தி ஊர்வலமாக வந்தனர்.பழநி நகராட்சி அலுவலகத்தில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் வைரமுத்து உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE