மதுரை:சாத்தான்குளத்தில் வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ைஸ போலீசார் 2020 ஜூன் 19 ல் விசாரணைக்கு அழைத்துச் சென்று தாக்கினர்.
கோவில்பட்டி கிளைச் சிறையில் இருவரும் இறந்தனர். கொலை வழக்குப் பதிந்து சி.பி.ஐ., விசாரிக்கிறது. இதில் கைதான இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ., ரகு கணேஷ், போலீஸ்காரர் தாமஸ் பிரான்சிஸ் உட்பட 9 பேர் மதுரை மத்திய சிறையில் உள்ளனர்.எஸ்.ஐ., ரகு கணேஷ் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஜாமின் மனு தாக்கல் செய்தார்.
போலீஸ்காரர் தாமஸ் பிரான்சிஸ், 'கைதாகி 180 நாட்களுக்கு மேலாகிறது. என் சகோதரருக்கு ஜன., 11 ல் திருமணம் நடக்கிறது. இதில் பங்கேற்க எனக்கு இடைக்கால ஜாமின் அனுமதிக்க வேண்டும்,' என மனு செய்தார்.நீதிபதி எம்.நிர்மல்குமார்: தாமஸ் பிரான்சிஸ் ஜன.,10 முதல் ஜன.,12 வரை இடைக்கால ஜாமினில் செல்ல அனுமதிக்கப்படுகிறது. போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றார். ரகு கணேஷ் ஜாமின் மனு மீதான தீர்ப்பை நீதிபதி ஒத்திவைத்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE