பேரூர்:கோவை மேற்குத் தொடர்ச்சி மலையில், நேற்று முன்தினம் மாலை முதல், கனமழை பெய்யத் துவங்கியது. அதிகாலை வரை மழை தொடர்ந்ததால், கோவை குற்றாலம், வைதேகி உள்ளிட்ட நீர்வீழ்ச்சிகளில் நீர்வரத்து அதிகரித்தது. அதனால், நொய்யல் ஆற்றில் செந்நீர் பெருக்கெடுத்தது. சுற்றுலாப்பயணிகளின் பாதுகாப்பு கருதி, போளுவாம்பட்டி வனத்துறையினர், கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சிக்கு செல்ல, நேற்று காலை தடை விதித்தனர். மழை தொடர்ந்தால், இன்றும் தடை நீடிக்கும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE