போத்தனூர்:சுந்தராபுரம் அடுத்து எல்.ஐ.சி., காலனியிலிருந்து, குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் 1 செல்லும் வழியில், டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. இதன் சிறிது முன்பாக, தனியார் தொழிற்சாலையின் சுற்றுச்சுவரினை ஒட்டி, ஆண் சடலம் ஒன்று, முகத்தில் காயத்துடன் காணப்பட்டது.தகவலறிந்த போத்தனூர் போலீசார் சடலத்தை மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விசாரணையில், அவர் மேற்கு வங்காளத்தை சேர்ந்த நிரஞ்சன், 42, மலுமிச்சம்பட்டி, சிட்கோவிலுள்ள தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தவர்; இரவு அதிகளவு மது குடித்து, மாரடைப்பு ஏற்பட்டு, உயிரிழந்திருக்கலாம் என போலீசார் கூறுகின்றனர். இருப்பினும் பிரேத பரிசோதனைக்கு பிறகே, இறப்புக்கான காரணம் தெரியவரும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE