கோவை;கோவை விழாவின் ஒரு பகுதியாக, கோவையில் உள்ள தொழில் கூடங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, உடல் ஆரோக்கிய பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.இந்த பரிசோதனையில் நீரிழிவு, ரத்த அழுத்தம் மற்றும் கண் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. இதுவரை நடந்த பரிசோதனையில் புதிதாக 25 சதவீதம் தொழிலாளர்களுக்கு நீரிழிவும், 15 சதவீதம் பேருக்கு உயர் ரத்த அழுத்தமும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த பரிசோதனைக்கு, கே.எம்.சி.ஹெச்., ஜெம், பி.எஸ்.ஜி., ஸ்ரீ ராமகிருஷ்ணா, அரவிந்த் மற்றும் சங்கரா கண் மருத்துவமனைகள் உதவி வருகின்றன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE