பொங்கலுார்:-ஐப்பசி மாதம் தீபாவளி பண்டிகை வந்ததால் தொழிலாளர்கள் பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டனர்.மார்கழி மாதம் என்பதால் வீடுகளில் இறைச்சி சமைப்பது நிறுத்தப்பட்டது. இதனால், நாட்டு கோழி விற்பனை பாதிக்கப்பட்டது. விரைவில், விரத காலம் முடிய உள்ளதால் நாட்டுக் கோழிகளுக்கு கிராக்கி ஏற்படும் வாய்ப்பு உள்ளது.நாட்டுக்கோழி வளர்ப்போர் கூறியதாவது:இன்னும் ஒரு வாரத்தில் மார்கழி விரதம் முடிய உள்ளதால் வரும் தை மாதம் முதல் கோழி விற்பனை எகிறும். பங்குனி, சித்திரை மாதங்களில் கோவில் திருவிழா களை கட்டும். எனவே, நாட்டுக் கோழிகளுக்கான தேவை அதிகரிக்கும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE