திருப்பூர்,:புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் நடவு செய்த சோளப் பயிர் நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன.திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதியில் மானாவாரி பயிராக பெருமளவு சோளம் பயிரிடப்படுகிறது. கடந்த செப்., மற்றும் அக்., மாதங்களில் பருவ மழையின் போது, வெள்ளை மற்றும் சிகப்பு சோள ரகங்களை விவசாயிகள் பயிரிட்டனர்.அதிக நீர் பாய்ச்ச வேண்டிய கட்டாயம் இல்லாத பயிராக உள்ளதால் தமிழகத்தில், பெரும்பாலான மானாவாரி நிலங்களில் இது பயிரிடப்படுகிறது. மூன்று மாத காலப் பயிரான சோளம் புரட்டாசி மற்றும் ஐப்பசி மாதவாக்கில் திருப்பூர் சுற்றுப்பகுதியில் பரவலாகப் பயிரிடப்பட்டது.பருவ மழை ஓரளவு நல்லமுறையில் பெய்தது. இதனால், சோளப் பயிர் நல்ல முறையில் வளர்ந்து செழித்து காணப்படுகிறது. நல்ல முறையில் வளர்ந்து நிற்கும் சோளப்பயிர் அறுப்பு பணியைத் துவங்க விவசாயிகள் தயாராகி வருகின்றனர். விலையும் நல்ல வகையில் இருக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE