வால்பாறை:பள்ளிகள் திறப்பு குறித்து கருத்துக்கேட்பு கூட்டம் வால்பாறையில் நடந்தது. அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த கூட்டத்தில், மாணவர்கள் வருகை குறித்து, பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டது.பெற்றோர்கள் பேசுகையில், 'கொரோனா தடுப்பு நடவடிக்கையால், ஒன்பது மாதத்திற்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டதால், மாணவர்கள் படித்த பாடங்களை மறந்துவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. மொபைல்போன் 'டவர்' பிரச்னையால் எஸ்டேட் பகுதியில் வசிக்கும் மாணவர்கள், 'ஆன்லைன்' கல்வி பயில முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மீண்டும் பள்ளிகளை வழக்கம் போல் திறக்க வேண்டும்,' என்றனர்.பள்ளி தலைமை ஆசிரியர் சிவன்ராஜ் பேசுகையில், ''பெற்றோர் ஒப்புதல் வழங்கினால், பொங்கலுக்கு பின் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான வகுப்புகள் நடைபெறும். காய்ச்சல் பரிசோதனைக்கு பின் தான், மாணவர்களை வகுப்பறைக்குள் அனுமதிக்கப்படுவர். காய்ச்சல், இருமல், சளி போன்ற அறிகுறி இருந்தால், மாணவர்களை பள்ளிக்கு அனுப்புவதை பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும். ''பெற்றோரின் கருத்துக்கள் அரசுக்கு தெரிவிக்கப்படும். பள்ளி திறப்பு குறித்து அரசு அறிவிப்பு வெளியிடும்,'' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE