பொள்ளாச்சி:பொள்ளாச்சியில் தி.மு.க., இளைஞரணியினர் ஒட்டிய போஸ்டர்கள் இரவோடு இரவாக அகற்றப்பட்டன.பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பாக, அ.தி.மு.க.,வை சேர்ந்த மூவரை சி.பி.ஐ., கைது செய்தது. இதனையடுத்து, தி.மு.க.,வினர், 'பெண்களின் எதிரி அ.தி.மு.க.,' என சமூக வலைதளங்களில் வைரலாக தகவல்களை பரப்பினர்.மேலும், பொள்ளாச்சி பகுதியில், தெற்கு மாவட்ட தி.மு.க., இளைஞரணி சார்பில், சர்ச்சைக்குரிய வாசகத்துடன், பொள்ளாச்சி முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டது. இச்சம்பவத்தால், பொள்ளாச்சி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த போலீசார் மற்றும் அ.தி.மு.க.,வினர், இரவோடு இரவாக போஸ்டர்களை அப்புறப்படுத்தினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE