அன்னுார்:அன்னுார் தெற்கு ஒன்றிய தி.மு.க., அலுவலக திறப்பு விழா நேற்றுமுன்தினம் கணேசபுரத்தில் நடந்தது. நீலகிரி எம்.பி., ராசா அலுவலகத்தை திறந்து வைத்தார். பொன்னே கவுண்டன் புதுாரில், தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் சத்தியமூர்த்தி தலைமையில், இணைப்பு விழா பொதுக்கூட்டம் நடந்தது. விழாவில் தி.மு.க., துணைப் பொதுச் செயலாளரும், நீலகிரி தொகுதி எம்.பி.,யுமான ராசா பேசுகையில், ''தமிழகத்தில் கமிஷன் அதிகரித்துள்ளது. 10 கோடி ரூபாய் ரோடு போட, 5 கோடி ரூபாய் கமிஷன் கேட்கின்றனர். கிளைச் செயலாளர் துவங்கி, ஒன்றிய செயலாளர், மாவட்டச் செயலாளர், அமைச்சர் வரை ஊழல் செய்கின்றனர்,'' என்றார்.திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் பத்மநாபன், வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் ஆனந்தன், தலைமை செயற்குழு உறுப்பினர் நடராஜன், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் முரளி, ஒன்றிய பொறுப்புக் குழு உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE