சூலுார்:பொன்னாண்டாம்பாளையம் கிராம மக்களின் கோரிக்கைக்கு விரைந்து தீர்வு காண்பதாக கலெக்டர் ராஜாமணி உறுதி அளித்துஉள்ளார்.ஒரே ஊராட்சி நிர்வாகத்தின் கீழ் தங்கள் கிராமத்தை கொண்டு வர கோரி பொன்னாண்டாம்பாளையம் கிராம மக்கள் நேற்று முன்தினம் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். போலீசார் அவர்களை கைது செய்தனர். வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித் துறை மற்றும் போலீஸ் அதிகாரிகளின் அறிவுறுத்தல்படி, போராட்டக் குழுவினர் நேற்று முன்தினம் மாலை கலெக்டர் ராஜாமணியை சந்தித்து தங்கள் கோரிக்கையை வலியுறுத்தினர்.போராட்டக்குழுவினர் கூறியதாவது:கிராமத்தில் உள்ள அத்தியாவசிய பிரச்னைகள் குறித்து கவனத்துக்கு கொண்டு சென்றால், உடனடியாக தீர்த்து வைக்க நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதியளித்துள்ளார். கிராமத்தை ஒரே ஊராட்சி நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருவது தொடர்பான நடவடிக்கைகள் எந்த நிலையில் உள்ளது என்பதை ஆய்வு செய்து, இரு மாதங்களுக்குள் அரசாணை வெளியிட நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் உறுதியளித்துள்ளார். அதை ஏற்றுக்கொண்டு நாங்கள் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றுள்ளோம்.இவ்வாறு போராட்டக்குழுவினர் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE